Sunday, March 31, 2013

தலைவா!





வெற்றி வந்து குவிந்தபோது கர்வமில்லை. தொடர் தோல்விகள் தடுமாறச் செய்ததில்லை. தலைவர்கள், இளைஞர்கள் மேல் நம்பிக்கை வைத்தால்  எதிலும் வெற்றி நிச்சயம். அதற்கு நல்லதோர் உதாரணம், இந்தியாவின் கிரிக்கெட் கேப்டன் தோனி.

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக அதிக டெஸ்ட் வெற்றிகளைக் குவித்த கேப்டனாக முடிசூட்டியுள்ளார் தோனி. முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் 21 டெஸ்ட் வெற்றிகள் எனும் சாதனையை முறியடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 22 வெற்றிகள். ஒருநாள்போட்டிகளில் 77 வெற்றிகள். டி 20 மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையை  வாங்கித் தந்தது என தோனி தலைமையில் இந்திய அணி தொடர்ந்து சாதித்து வந்திருக்கிறது.

 ‘என்னுடைய அணியில் சச்சின் எவ்வளவு முக்கியமானவரோ... அதே அளவுக்கு விராட் கோலியும் இஷாந்த் ஷர்மாவும்... எந்த ஒரு வீரரும் மிக மிக முக்கியமானவர்களே. இதில் ஒருநாளும் மூத்தவர், இளையவர் என்கிற பாகுபாடு கிடையாது.

அணியின் ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனித் திறமைகள் உண்டு. ஒவ்வொருவருக்கும் அணியில் முக்கியமான பொறுப்புகள் உண்டு. ஒரு கேப்டனாக அவற்றை சரியான அளவில் திட்டமிட்டுப் பயன்படுத்துவது, அவர்களுடைய பொறுப்பினை உணர்த்துவதுதான் என்னுடைய வேலை. அதனால், என்னுடைய வெற்றி எதுவுமே எனக்கு மட்டுமே சொந்தமானதல்ல... அது அணியின் ஒவ்வொருக்குமானது.’

தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் நம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி கூறியவைதான் இது. எவ்வளவு உண்மையான வார்த்தைகள். ஓர் அணியை எப்படி வழிநடத்திச் செல்லவேண்டும் என்பதை இதைவிட சிறப்பாக சொல்லிவிட முடியாது. வெற்றிகளை சக வீரர்களுக்கு பங்கு போட்டுக் கொடுத்துவிட்டு... தோல்விகளுக்கு தன்னை மட்டும் பொறுப்பாக முன்னிறுத்துகிற கேப்டன்களைக் காண்பது மிக மிக அரிது.

தொடர் தோல்விகளைக் கண்டு பயந்து, கேப்டன் பதவிக்கே கும்பிடு போட்டு ஓடுகிறவர்களுக்கு மத்தியில், எதையும் எதிர்த்து நிற்கிற வித்தியாசமான கேப்டன் தோனி. இந்தத் தன்னம்பிக்கையும் தைரியமும்தான் அவருடைய வெற்றியின் ரகசியம்.

வெற்றிகளைக் குவிக்கும்போது, தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதும்  தோல்வியடையும்போது, கோபத்தோடு கற்களை வீசுவதும் இந்திய ரசிகர்களின் இயல்பு. கவாஸ்கர், கபில்தேவ் காலத்திலிருந்தே அப்படித்தான். இதற்கு முன்பு என்னதான் சாதனைகளை செய்து குவித்திருந்தாலும் இன்று நீ என்ன செய்தாய் என்பதுதானே இங்கே வேதமந்திரம்?

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஆஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திலும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி மண்ணைக் கவ்வியபோது, தோனியை கேப்டன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்கிற குரல்கள், நாடெங்கும் ஒட்டுமொத்தமாக ஒலித்தன. தோனி புன்னகைத்தார்.

இதோ இப்போது ஆஸ்திரேலிய அணியை தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்திவிட்டார் தோனி. உடனே கவாஸ்கர் உணர்ச்சிவசப்பட்டு, ‘2019வரை தோனிதான் இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கவேண்டும்’ என்றார். அதற்கும் தோனி அதே புன்னகையைத்தான் பதிலாக தருகிறார். வெற்றி, தோல்விகள் இந்தக் கேப்டனை ஒன்றுமே செய்வதில்லை.

‘தோனி எதையும் தாங்கிக்கொள்பவர். தன்னுடைய பொறுப்பினை அவர் எப்போதும் தட்டிக்கழித்ததேயில்லை. தோல்வியின்போது, பயந்து ஓடியவர் இல்லை. தன்னுடைய தவறுகளை மிக தைரியமாக ஒப்புக்கொண்டு, அதை சரிசெய்ய முனைகிறவர். தோனி ஒரு ஸ்பெஷல் டேலண்ட். ஒரு ஸ்பெஷல் மனிதர்’ என்று புகழாரம் சூட்டுகிறார், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சாப்பல்.

2007ம் ஆண்டு இந்தியா வந்திருந்த ஆஸி அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் கும்ப்ளே காயம் காரணமாக விலகிவிட... துணைக் கேப்டனாக இருந்த தோனி கேப்டனாக்கப்பட்டார். அந்தத் தொடரையும் வென்று கொடுத்தார். அதற்குப் பிறகு தோனி கேப்டனான நேரம் பார்த்துதான் கங்குலி, டிராவிட், லட்சுமணன் என இந்திய அணியின் வலுவான பேட்டிங் வரிசை முற்றிலுமாக ஓய்வு பெற்றது. சச்சின் மட்டும்தான் எஞ்சியிருந்தார். அவரும் இரண்டாண்டுகளாக ஒரு சதமடிக்கவே தடுமாறிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் வயது முதிர்ந்துகொண்டிருக்கும் சேவாக் மற்றும் காம்பீர் ஜோடி, சென்ற இடமெல்லாம் சொதப்பியது. ஒரே வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர்கானுக்கும் வயதாகிவிட்டது. பழைய  துடிப்பில்லை.  

இந்தச் சூழலில்தான் அஸ்வின், பிரக்யன் ஓஜா, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் மாதிரியான இளம் பந்துவீச்சாளர்களை உருவாக்குகிறார். இன்னொரு பக்கம் விராத் கோலி,ரவீந்தர ஜடேஜா, புஜாரா, சுரேஷ் ரெய்னா மாதிரியான பேட்ஸ்மேன்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புத்  தந்து உயர்த்துகிறார்.  அதோடு, வெற்றிகளையும் குவிக்கிறார். அதனாலேயே இவ்வெற்றிகள் அசாதாரணமானவையாக ஆகிவிடுகின்றன.

இதுகுறித்து ஒரு பேட்டியில், ‘புதிய இளைஞர்கள் ஓரிரு முறை தோல்வியடைந்து விட்டால், அவர்களை அப்படியே கைவிட்டுவிடக் கூடாது. அவர்கள் மேல் நம்பிக்கை வேண்டும். அந்த நம்பிக்கை ஒருநாள் பலிக்கும், அதுதான் வெற்றியைக் கொடுக்கும்’ என்கிறார் தோனி.

தோனிக்கென்று சில சிறப்பம்சங்கள் உண்டு.

நான் பண்ணுறேன் பார்!

மற்ற வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் தோனி. கேப்டனாவதற்கு முன், அதிரடி ஆட்டத்தை கடைபிடித்தே வந்தாலும்  அதற்குப் பிறகு தன்னுடைய பொறுப்பை உணர்ந்து, பொறுமையான பேட்டிங்கில் அசத்தினார். 5 டெஸ்ட்  போட்டிகளில் 2,729 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 5 சதங்களும் அடங்கும். எப்போதும் ஆறாவது விக்கெட்டுக்கு களமிறங்கும் தோனி, எப்போதும் பந்துவீச்சாளர்களான டெயில் எண்டர்களோடுதான் அதிகமாக பேட்டிங் செய்ய வேண்டியதாயிருக்கும். இருந்தும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ரன்களைக் குவிக்க அவர் தவறியதேயில்லை. ஒருதினப் போட்டிகளிலும் அவருடைய சராசரி 51.85.

அனைவருக்கும் உண்டு மரியாதை

அணியின் எந்த வீரராக இருந்தாலும் அவருக்கு உரிய மரியாதையை அளிப்பதில் தோனிக்கு நிகரே கிடையாது. கங்குலி ஓய்வு பெறுவதற்கு முன், தன் கடைசி டெஸ்டில் விளையாடுகிறார். அந்த டெஸ்டுக்கு தோனிதான் கேப்டன். இருந்தாலும் கங்குலியை கௌரவிக்கும் விதத்தில், அந்த டெஸ்ட் முடியும் தருவாயில் எதிரணியின் கடைசி விக்கெட் விழுவதற்கு முன், சில ஓவர்கள் மட்டும் கங்குலியை கேப்டனாக இருக்கக் கூறினார். இதைவிட ஒரு சீனியருக்கு எப்படி சிறப்பு செய்ய முடியும்?

வெற்றி உனக்கு, தோல்வி எனக்கு!

ஆஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திலும் இந்திய அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தபோது, பத்திரிகையாளர் சந்திப்புகளில் கடுமையான கேள்விகளை தோனி சந்திக்க வேண்டியிருந்தது. தோல்வியடையும் நேரத்தில், எந்தக் குறிப்பிட்ட வீரரையும் இவர்தான் காரணம் என்று சுட்டிக்காட்டியதில்லை. அதோடு, தோல்விக்கு தன்னுடைய அணுகுமுறைதான் காரணம் என்பதையும் ஒப்புக்கொள்ளும் தைரியம் தோனிக்கு இருக்கிறது.

கூல்!

எப்படிப்பட்ட இக்கட்டான சூழலிலும் தன்னுடைய அமைதியை மட்டும் இழக்காதவர் தோனி. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் நல்ல ஸ்கோரை விரட்டியது இந்தியா. ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் சரிய... அவரே களமிறங்கி பொறுமையோடு அணியின் ஸ்கோரை உயர்த்தி, இந்தியாவை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றதை இந்தியாவே அறியும். அதோடு, தோல்வியின் விளிம்பில் இருந்தாலும் தன்னுடைய அமைதியை மட்டும் இழந்ததேயில்லை தோனி. அதனால்தான் அவரை, ‘கேப்டன் கூல்’ என்று அனைவரும் அழைக்கிறார்கள்.

காத்திருந்து தாக்கு!

தோனியின் பலவீனமாகச் சொல்லப்படுவது, அவர் எதிரணி தவறு செய்யும் வரை காத்திருந்து பிறகுதான் தாக்குவார் என்பது. அதுதான் அவருடைய பலமும் கூட! ஆட்டம் நம்முடைய போக்கில் செல்லவில்லையென்றால், அதை வலிந்து எதையாவது செய்து ஏடாகூடமாய்க்காமல், பொறுமையாகக் காத்திருந்து தாக்குவதுதான் தோனியின் பாணி. அதுதான் அவருக்கு இத்தனை வெற்றிகளையும் பெற்றுத் தந்திருக்கிறது.

அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா உடனான ஹைதராபாத் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மைக்கேல்கிளார்க்கும் மேத்யூ வேடும் நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கி, கிட்டத்தட்ட 150 ரன்கள் குவித்தனர். தோனி பதட்டமடையவில்லை. காத்திருந்தார் மிகவும் பொறுமையாக... ஸ்கோர் 208 ஆக இருந்தபோது, மேத்யூ வேட் அவுட்டானார். அதற்குப் பிறகுதான் தன்னுடைய அதிரடியை தொடங்கினார். ஃபீல்டிங்கில் மாற்றங்கள் பண்ணினார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. 208க்கு 5 விக்கெட் என்ற நிலையில் இருந்த ஆஸ்திரேலிய அணி 237 ரன்களுக்குள் சுருண்டது. இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

என்னதான் ஆகச் சிறந்த கேப்டனாகவே இருந்தாலும் தோனியின் மீதும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. டெஸ்ட் போட்டிகளில் தவறான அணுகுமுறையை பின்பற்றுகிறார், முன்முடிவுகளோடு வீரர்களை தேர்ந்தெடுக்கிறார், குறிப்பிட்ட சில வீரர்களுக்கு மட்டும் தொடர்ந்து வாய்ப்பு தருவதோடு சீனியர்களை மதிப்பதில்லை, டி20 போட்டிகளுக்குதான் அவர் லாயக்கு, டெஸ்ட்டுக்கு வேண்டாம் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

அண்மையில் ராகுல் டிராவிட் ஒரு பேட்டியில், ‘தோனி டி20 கேப்டன் பதவியை விட்டுவிட வேண்டும். அதை யார் வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ள முடியும். ஆனால், தோனி மாதிரி அனுபவமிக்க சீனியர்தான் டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருக்க வேண்டும்’ என்றார்.

அது நிச்சயமாக ஏற்றுக் கொள்ளக்கூடியதே. தோனி தொடர்ச்சியாக டி20 ஒருதினப் போட்டிகள், டெஸ்ட் என மூன்றுவிதப் போட்டிகளுக்கும் கேப்டனாக இருப்பதால், அளவுக்கதிகமான மாற்றங்களை தொடர்ந்து தனக்குள் செய்துகொள்ள வேண்டியதாயிருக்கிறது. போட்டிகளுக்கேற்ப தன்னுடைய அணுகுமுறையை அடிக்கடி மாற்ற வேண்டியதிருக்கிறது. டி20 போட்டிகளுக்கு விராத் கோலி போன்ற இளம் வீரரை கேப்டனாக்கலாம். அது தோனிக்கு கொஞ்சம் ஓய்வு கொடுப்பதாக இருக்கும். அதோடு, ஐபிஎல் மாதிரி போட்டிகளிலும் தோனி ஓய்வெடுக்கலாம்.

தோனியிடம் முன்வைக்கப்படும் இன்னொரு பிரச்சினை, குறிப்பிட்ட சிலருக்கே தொடர்ந்து வாய்ப்பளிக்கிறார் என்பது. அதற்கேற்ப இரண்டு சதங்களை அடித்திருக்கும் ஆஜிங்க்ய ரஹானேவும், மனோஜ் திவாரியும் தொடர்ந்து அணியில் புறக்கணிக்கப் படுகின்றனர். இருவருமே மிகச் சிறந்த வீரர்கள். இருப்பினும் அணியில் அவர்களுக்கான இடத்தை சேவாக்கும் கம்பீரும் யுவராஜ் சிங்கும் ரெய்னாவும் பிடித்து வைத்திருந்தனர். இப்போது அந்த இடம் காலியாகிவிட்டதால், எதிர்காலத்தில் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கலாம்.

இந்தியாவில் நடை பெறும் போட்டிகளில் மட்டும்தான் அதிக வெற்றிகளைக் குவிக்கிறார், அவரால் கங்கூலி போல வெளிநாடுகளில் வெற்றி பெற முடியாது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், தோனியின் தலைமையில்தான் முதன்முறையாக இந்திய அணி நியூஸிலாந்திலும், மேற்கிந்தியத் தீவுகளிலும் வெற்றியை ருசித்தது.

சென்ற ஆண்டு மட்டும்தான் இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. நம்முடைய ரிடையர்டான சீனியர்களின் மோசமான ஃபார்மும் நல்ல பந்துவீச்சாளர்கள் காயமடைந்ததும்தான் அதற்கு மிக முக்கியக் காரணம்.

இப்போதுதான் இளம் பந்துவீச்சாளர்களும் பேட்ஸ்மேன்களும் மலர்கின்றனர். அதுவும் மாறிவிடும் என்று உறுதியாக நம்பலாம். அடுத்த நவம்பரில் தென்னாப்ரிக்காவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்குதான் தோனி தன் விமர்சகர்களுக்கான பதிலைத் தரமுடியும்.

புயல்களைக் கடந்த தோனி!

மிகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் தோனி. அவருடைய அப்பா பான்சிங், தொழிற்சாலையொன்றில் பம்ப் ஆபரேட்டராகப் பணியாற்றியவர். பள்ளியில் படிக்கும்போது, மிக மிக சுமாரான மாணவர் தோனி. படிப்பு ஏனோ மண்டையில் ஏறவேயில்லை. ஆனால், விளையாட்டு மிகவும் பிடித்திருந்தது.

அரைமணி நேரம் கிடைத்தாலும் மைதானத்தில்தான் வசிப்பார். கால்பந்து மற்றும் பாட்மிண்டன் என்றால், தோனிக்கு அவ்வளவு பிடிக்கும். எப்போதும் விளையாட்டுதான்.

கால்பந்தாட்டப் போட்டிகளில் கோல்கீப்பராக மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாடியுள்ளார். பாட்மிண்டன் போட்டிகளிலும் மாவட்ட அளவில் கலந்துகொண்டு, பரிசுகளை வென்றுள்ளார். அதுவரை அவருக்கு கிரிக்கெட்டில் பெரிய ஆர்வமே இருந்ததில்லை. அவருடைய பள்ளி ஆசிரியர் கே.ஆர்.பானர்ஜி என்பவர், அவருடைய நண்பரின் கிரிக்கெட் கிளப்புக்கு ஒரு விக்கெட் கீப்பர் தேவைப்படுவதாக அறிந்து, தோனியை அனுப்பி வைத்தார்.

தோனியின் சுறுசுறுப்பும் பாயும் திறனும் வளைந்து கொடுக்கிற ஆற்றலும் கால்பந்தினைவிட கிரிக்கெட்டுக்கு ஏற்றது என்று பானர்ஜி நினைத்தார். அதோடு, கிரிக்கெட்டில்தான் அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கருதி, தோனியிடம் கிரிக்கெட் ஆட கேட்டுக்கொண்டார். தோனியும் ஆசிரியரின் சொல்லைத் தட்டமுடியாமல், கையில் கிளவ்ஸோடு விக்கெட் கீப்பராக களமிறங்கினார். தோனிக்கு அப்போது தெரியாது, இதுதான் அவருடைய வாழ்க்கையையே மாற்றப் போகிறதென்பது.

தன் முதல்போட்டியிலேயே மிகச் சிறப்பாக விக்கெட் கீப்பராக செயல்பட்டார் தோனி. இதைப் பார்த்த அந்த அணியின் கோச், தோனியை வெகுவாகப் பாராட்டி, அணியிலேயே தக்கவைத்துக்கொண்டார். அதற்குப் பிறகு விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் அதிரடியான பேட்ஸ்மேனாகவும் மிகச் சிறந்த கீப்பராகவும் செயல்பட்டு, அனைவருடைய பாராட்டுகளையும் பெற்றார். 1995 தொடங்கி, 1998 வரைக்கும் கமாண்டோ கிரிக்கெட் கிளப் என்கிற அணிக்காக விளையாடினார்.

நல்ல திறமை எங்கிருந்தாலும் அதற்குரிய மரியாதையைப் பெற்றுவிடும். உள்ளூர்ப் போட்டிகளில் தோனியின் திறமையைக் கண்டு, சென்ட்ரல் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் எனும் நிறுவனம் அவருக்கு ஸ்பான்சர் செய்ய முன்வந்தது. தோனி அப்போது முதல்தரப் போட்டிகளில் கூட விளையாட ஆரம்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்குப் பிறகு 19 வயதிற்குட்பட்டோருக்கான பீகார் அணியில் இடம் பிடித்தார் தோனி. அந்த அணிக்காக சிறப்பாக விளையாடி, கூச் பேகர் டிராபியின் ஃபைனல் வரைக்கும் அழைத்துச் சென்றார். அவருடைய அதிரடி ஆட்டம், ரஞ்சிக் கோப்பைக்கான பீகார் அணியில் இடம் பிடித்துக் கொடுத்தது. அதோடு, ரயில்வேயில் வேலையும் கிடைத்தது. 2001ம் ஆண்டு தொடங்கி, 2003 வரை காரக்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கலெக்டராகப் பணியாற்றினார் தோனி. கிடைத்த வேலையை ஒழுங்காக செய்ததோடு, கிரிக்கெட்டையும் விட்டுவிடவில்லை.

2003 மற்றும் 2004ம் ஆண்டு ரஞ்சிப் போட்டிகளில் முழுமூச்சுடன் பீகார் அணிக்காக விளையாடினார். இதையடுத்து அந்த நேரத்தில் ஜிம்பாப்வே சென்ற இந்திய அணிக்காக விக்கெட் கீப்பராக தேர்வானார் தோனி. ஜிம்பாப்வேயுடனான ஒரு டெஸ்ட் போட்டியில் ஏழு கேட்ச், நான்கு ஸ்டம்பிங் என அசத்தினார். அதோடு, பேட்டிங்கிலும் அரை சதமடித்தார். இதையடுத்து, பாகிஸ்தான் ‘ஏ’ அணியுடனான போட்டிகளுக்கு தேர்வானார். அதில் ஒரு சதம், இரண்டு இரட்டை சதமென விளாசித் தள்ளினார்.

நயன்மோங்கியாவுக்குப் பிறகு இந்திய அணிக்கு நல்ல விக்கெட் கீப்பர் இல்லாமல் அல்லாடிக்கொண்டிருந்த போது, 21வயது இளைஞரான தோனியின் அதிரடி ஆட்டம் நம் தேர்வுக்குழு மற்றும் அப்போதைய இந்திய கேப்டன் கங்குலியை வெகுவாக ஈர்த்தது. உடனடியாக வங்காள தேசத்துக்கு எதிரான போட்டிக்கு தோனி தேர்வானார். இந்திய அணிக்காக விளையாடும் கனவு பலித்தது.

தனது ஐந்தாவது போட்டியிலேயே வலுவான பாகிஸ்தான் அணிக்கு எதிராக 148 ரன்களை விளாசித் தள்ளினார் தோனி! கிரிக்கெட் உலகமே யாருப்பா இந்தப் பையன் எனத் திரும்பிப் பார்த்தது. சில போட்டிகளுக்குப் பிறகு இலங்கை அணிக்கெதிராக 183 ரன்களைக் குவித்தார். இது இந்திய அணியில் அவருடைய இடத்தினை உறுதிசெய்தது. இன்றுவரை அவர் அடித்த 183தான் உலக அளவில் விக்கெட் கீப்பராக ஒரு பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ஸ்கோர் என்கிற சாதனையாகத் திகழ்கிறது.

ஐபிஎல்லிலும் வெற்றிதான்

இந்திய அணிக்கு மட்டுமல்ல, ஐபிஎல் போட்டிகளில் நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் தோனிதான் கேப்டன்.  இரண்டு முறை சென்னை அணிக்கு கோப்பையைப் பெற்றுத்தந்து, சென்னைக்கு பெருமை தேடித் தந்திருக்கிறார்.

தோனியிடம் கற்றுக்கொள்ள 10 தலைமைப் பண்புகள்
  • தன்னுடைய திறமையை முழுமையாக வெளிக்காட்டி, அணியிலிருப்பவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பது.
  • வெற்றியில் அமைதியாகவும் தோல்வியில் கலக்கமில்லாமலும் இருப்பது.
  • உயர்பதவியில் இருந்தாலும் அடக்கமாக இருப்பது.
  • அணியில் ஒவ்வொருவரையும் சமமாக நடத்துவது.
  • இளைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பது.
  • புதிதாக செய்துபார்க்க நினைப்பவர்களை ஊக்கப்படுத்துவது.
  • தோற்பவர்கள்மேல், நம்பிக்கை வைத்து வாய்ப்பளிப்பது.
  • வெற்றியை அணியிலிருக்கிற அனைவருக்கும் பகிர்வது, அதைப் பொதுவில் சொல்வது.
  • அணியின் ஒவ்வொருவர் மீதும் நம்பிக்கை வைப்பது.
  • சிக்கலான நேரங்களிலும் தடுமாறாமல் உறுதியான முடிவுகளை எடுப்பது.

ஹெலிகாப்டர் ஷாட்!

தோனி தன் பேட்டைச் சுற்றி, சிக்ஸராக அடிக்கிற ஹெலிகாப்டர் ஷாட் அவருடைய ஸ்பெஷல். தோனியிடம் இதுகுறித்துப் பேசும்போது, ‘சின்ன வயசுல டென்னிஸ் பால்ல, ஊர் மைதானத்துல கிரிக்கெட் ஆடுவோம். அப்போது கத்துக்கிட்டதுதான் இந்த ஹெலிகாப்டர் ஷாட். இதை எனக்கு கத்துக் குடுத்தது, என்னுடைய பள்ளி நண்பன்’ என்கிறார்.

Thanks to PUTHIYATHALAIMURAI

Wednesday, February 6, 2013

எழுத்தாளர் சுஜாதாவின் சொல் உபயம்.......



சுஜாதாவின் தீவிர இரசிகனாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் எனக்கு அவ்ரது சொல் உபயங்கள் மீது அளவற்ற ஆச்சர்யம்...........

தற்பொழுது படித்துக்கொண்டிருக்கும் மூன்று குற்றங்கள் என்ற புத்தகத்திலிருந்து ஒரு சிறந்த உதாரணம்...................

வக்கில் கனேஷ், வசந்த் மற்றும் அவரது நண்பர்களுக்கிடையே நடக்கும் ஒரு சின்ன உரையாடல்..........

பொதுவாக நாம் சதுரங்கம் விளையாடும் போது ஒருவர் காய்களை வெட்டிக்கொண்டிருந்தால் மற்றவருக்கு நாம் கொடுக்கும் அறிவுறைக்கு நாம் உபயோகிக்கும் வரிகள்

“பாத்து சார் எல்லா காய்களையும் வெட்டிருவான், மோசமான பையன்”

ஆனால்........ சுஜாதா ...........

“ பாத்து சார், போர்டை கிளீன் பன்னிடுவான்”............

மற்றொன்று.............................

கனேஷும் வசந்தும் உயரமான மலை உச்சிக்கு சென்று கீழே பார்க்கிறார்கள்....................

சாதாரன மொழி வழக்கு.....................

”ரொம்ப உயரம் இருக்கும் போல இருக்கே !!! என்ன ஒரு 50 அடி இருக்குமா”

சுஜாதாவினுடையது.....................

“ கீழே விழுந்தா மண்டை உடையரதுக்கு பத்து நிமிஷம் ஆகும் போல இருக்கே”

இதே போன்று நிஜமாக எங்கள் கண் முன்பு நடந்தது……………

நானும் என் நண்பரும் பேருந்தில் படியில் நின்று பயணம் செய்து கொண்டிருந்தோம் பாண்டிச்சேரியை நோக்கி……………
ஒரு நிறுத்ததில் ஒருவர் ஏறினார்…..எங்கள் அருகில் நின்று கொண்டிருந்தார்……..கண்டக்டர் பஸ்ஸின் முன்பக்கத்திலிருந்து பின் பக்கம் வந்து என்னிடம் யாராவது ஏறினார்களா என்று சைகையில் கேட்டார்… நானும் ஏறியவரைப் பாத்து இவர் மட்டும் ஏறினார் என்று ஏறியவருக்கு தெரியாமல் கண்டக்டரிடம் சொன்னேன்………..

ஆனால் ஏறியவர் டிக்கெட் எடுப்பதாக தெரியவில்லை……………

இதைப் பாரத்துக்கொண்டே இருந்த நடத்துனருக்கும் புதிதாக ஏறியவருக்கும் நடந்த உரையாடல்…..

கண்டக்டர் : ஏன்ப்பா என்னதான் தேடுரியா !!!!!!!!

ஏறியவர் : நான் ஏங்க உங்களை தேடனும்!!!!!!!!!!!!!!!!

கண்டக்டர் : இல்ல பஸ்ஸில ஏறுனவுடனே டிக்கெட் எடுக்க எல்லாரும்
கண்டக்டரதானே தேடுவாங்க!!!!!!!!!!!!!!!

(இதுக்கப்பரம் தான் அவர் டிக்கெட் எடுத்தார், நாங்கள் பின்னே நின்று சிரித்து கொண்டிருந்தோம், ஏறியவர் சிறிது நேரம் கழித்து (தனக்கு ஏற்கனவே கண்டக்டர் “பல்பு” கொடுத்துட்டார், அவர்க்கு ரிட்டன் பல்பு கொடுக்கனும்ன்னு நினைச்சிருப்பார் போல்!!!!!, மறுபடியும் அவர்களுக்கிடையே உரையாடல் தொடர்ந்தது….)

ஏறியவர் : கண்டக்டர், டிக்கெட் கொடுத்துட்டிங்களா எனக்கு!!!!!!!

கண்டக்டர் : ஏண்ப்பா!!!! எல்லாரும் பாண்டி-ல ருந்து ரிட்டன் வரும் போதுதான் இப்படிலாம் பேசுவாய்ங்க……. நீ என்ன போகும் போதே ஆரம்பிச்சுட்டியா…………………

(மறுபடியும் நாங்கள் சிரித்து கொண்டே பயணத்தை தொடர்ந்தோம்)

Tuesday, December 11, 2012

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!!



12.12.12-Rajinikanth Birthday Special சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்களுக்கு 12.12.12 ஒரு சூப்பர் நாள். 1000 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அபூர்வ நாள் என்பதால் மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் அபூர்வ ராகமாக ஒலித்த ரஜினியின் பிறந்த நாள். 12.12.12 என்பதை கூட்டினால் 36. சூப்பர் ஸ்டார் திரைப்படத்துக்கு வந்து 36 ஆண்டுகளை கடந்து விட்டார். 36ஐ அப்படியே திருப்பிப் போட்டால் 63 அதுதான் அவருக்கு வயது. அதுமட்டுமல்ல மரணத்தின் வாயிலை எட்டிப்பார்த்துவிட்டு அதை எட்டி உதைத்துவிட்டு திரும்பியிருக்கும் சூப்பர் ஸ்டார் மறுபிறவிக்கு இது முதல் பிறந்த நாள். இப்படி பல சிறப்பு அம்சங்களுடன் பிறக்கிறது 12.12.12. சூப்பர் ஸ்டாரின் சினிமா பயணம் 1975ல் தொடங்கியது. அன்று முதல் இன்று வரையிலான அவரது சினிமா பாதையில் கற்களும், முற்களும் நிறைந்திருந்தது. பூக்களும் கொட்டிக் கிடந்தது. அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 36-ஐ தினமலர் இணையதள வாசகர்களுக்குத் தருகிறோம்...

1. ரஜினி நடித்த முதல் படம் அபூர்வ ராகங்கள். அதில் அவர் பேசிய முதல் வசனம் "பைரவி வீடு இதுதானே..."என்பது தான்.  நடித்த காட்சிகள் 6.

2. ரஜினி சிகரெட் ஸ்டைல் மிகவும் புகழ்பெற்றது. அது அறிமுகமான படம் மூன்று முடிச்சு.

3. வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ரஜினி ஹீரோவாக நடித்த படம் பைரவி. இதில்தான் அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கப்பட்டது. வழங்கியவர் கலைப்புலி எஸ்.தாணு. நான் போட்ட சவால் படத்தின் டைட்டில் கார்டில்தான் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் போடப்பட்டது.

4. ரஜினி பேசிய முதல் பன்ஞ் டயலாக் "இது எப்படி இருக்கு?: படம் 16 வயதினிலே. இந்த வசனத்தையே "ஹவ் இஸ் இட்?" என்று ஆங்கிலத்திலும், "இப்புடு சூடு" என்று தெலுங்கிலும் பின்னாளில் பேசினார். இந்த பன்ஞ் டயலாக்கை தலைப்பாக வைத்து ஒரு படமும் வெளிவந்தது.

5. மூன்று முடிச்சு தொடங்கி எந்திரன் வரை பல படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் கொடூர வில்லனாக நடித்தது ஆடுபுலி ஆட்டம் படத்தில்தான். வில்லத்தனங்களை செய்து விட்டு "இது ரஜினி ஸ்டைல்" என்பார்.

6. ரஜினி நடித்த முதல் திகில் படம் ஆயிரம் ஜென்மங்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்த படம் சந்திரமுகி.

7. ரஜினி நடிக்க மறுத்த படம் "நீயா?" ஸ்ரீப்ரியாவின் சொந்தப் படத்தில் அவர் ரஜினியை நடிக்க கேட்டபோது நான்கைந்து ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன் என்று மறுத்து விட்டார். பின்னர் அந்த கேரக்டரில் நடித்தவர் கமல்.

8. பிராமண லாங்குவேஜ் பேசி நடித்த படம் சதுரங்கம், சென்னைத் தமிழ் பேசி நடித்த படம் தப்புத் தாளங்கள்.

9. வணக்கத்துக்குரிய காதலியே ரஜினியின் முதல் தோல்விப் படம்.

10. ரஜினிக்கு பிடித்த படம் "முள்ளும் மலரும்". பிடித்த இயக்குனர் "மகேந்திரன்". பிடித்த நடிகர் "கமல், பிடித்த நடிகை "ஷோபா.

11. சிவாஜியுடன் நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்". இதில் அவர் சிவாஜியின் வளர்ப்பு மகனாக நடித்தார். பிற்காலத்தில் சொந்த மகன் போல் சிவாஜியால் பார்க்கப்பட்டார். அவருடன் நடித்த கடைசிப் படம் "படையப்பா".

12. முதல் பேண்டசி படம் "அலாவுதீனும் அற்புத விளக்கும்". இதில் கமல் அலாவுதீனாக நடித்தார். ஒரிஜினல் கதையில் இல்லாத கமருதீன் என்ற கேரக்டர் ரஜினிக்காக உருவாக்கப்பட்டது.

13. முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த படம் "பில்லா". மூன்று வேடங்களில் நடித்த படம் "மூன்று முகம்".

14. குறுகிய காலத்தில் நடித்த படம் "அன்புள்ள ரஜினிகாந்த்". 6 நாட்களில் நடித்துக் கொடுத்தார். 9 நாட்களில் நடித்த படம் "மாங்குடி மைனர்".

15. மேனியாக் டிப்ரெசிங் நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமான பிறகு நடித்த படம் "தர்மயுத்தம்". அந்தப் படத்திலும் அந்த நோயால் பாதிக்கப்பட்டவராகவே நடித்தார்.

16. முதல் சினிமாஸ்கோப்  படம் "பொல்லாதவன்". முதல் 70எம்எம் படம் "மாவீரன்". முதல் 3டி படம் "சிவாஜி". முதல் அனிமேஷன் படம் "கோச்சடையான்".

17. ரஜினி தயாரித்த முதல் படம் "மாவீரன்". திரைக்கதை வசனம் எழுதிய படம் "வள்ளி". பாடல் பாடிய படம் "மன்னன்".

18. எம்.ஜி.ஆரின் போஸ்ட்டரை பார்த்து வீரம் வந்து சண்டை போடுபவராக, அவரது ரசிகராக நடிக்க மறுத்தார். இன்னொருவர் புகழில் குளிர்காயக்கூடாது என்பது அவரது கருத்து.

19. "பாண்டியன்", "அருணாசலம்" படங்கள் தன் நண்பர்களுக்காக ரஜினி நடித்துக் கொடுத்த படம்.

20. ரஜினியின் அதிக படங்களை இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் ஸ்ரீப்ரியா. அதிக படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் பஞ்சு அருணாசலம்.

21. ரஜினியின் 50வது படம் "ரங்கா". 100வது படம் "ஸ்ரீராகவேந்திரர்". ரங்கா படத்தில் ரஜினியின் அக்காவாக ஜெயலலிதா நடிப்பதாக இருந்தது. எம்.ஜி.ஆர் அவரை அரசியலுக்கு அழைத்துச் சென்றதால் நடிக்கவில்லை. ஸ்ரீராகவேந்திரர் படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்க மறுத்தார். பின்னர் ரஜினியின் அன்புக்காக இயக்கினார்.

22. எம்.ஜி.ஆர் நடிக்க இருந்த படம் "ராணுவ வீரன்". அவர் முதல்வரானாதல் நடிக்க முடியாமல் போக அந்தக் கதையில் ரஜினி நடித்தார்.

23. ரஜினி நடித்த சில படங்களின் பெயர்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது. "நானே ராஜா நீயே மந்திரி" என்ற டைட்டில் "தம்பிக்கு எந்த ஊரு" என்று மாறியது. "நான் காந்தி அல்ல", "நான் மகான் அல்ல" என மாறியது. "காலம் மாறிப்போச்சு" என்ற டைட்டில் "தர்மதுரை" ஆனது.

24. முதன் முதலாக ஜப்பான் மொழியில் டப் செய்யப்பட்ட இந்திய படம் "முத்து". ஜப்பானில் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்ட முதல் இந்திய நடிகர் ரஜினி.

25. ரஜினி எடிட் செய்த படம் "படையப்பா". படப்பிடிப்பு முடிந்து பார்த்தபோது படம் 21 ஆயிரம் அடி வந்திருந்தது. எந்தக் காட்சியையும் குறைக்க முடியவில்லை. படத்துக்கு 2 இடைவேளை விடலாமா என்று யோசித்தார்கள். தான் நடித்த காட்சிகளை வெட்டத் தயங்குகிறார்கள் என்று நினைத்த ரஜினி. தானே எடிட்டிங்கில் உட்கார்ந்து காட்சிகளை குறைத்தார். இதுபற்றி அவர் சொன்ன கருத்து "ரசிகனை ரொம்ப கொடுமைப்படுத்தக்கூடாது" என்பது.

26. அதிக நாள் ஓடிய படம் "சந்திரமுகி". அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் "எந்திரன்". குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் "அன்புள்ள ரஜினிகாந்த்".

27. "மூன்று முடிச்சு", "மாப்பிள்ளை", "மன்னன்", "படையப்பா" படங்களில் ரஜினியோடு மோதுபவர்கள் பெண்கள்.

28. "முள்ளும் மலரும்", "மூன்று முகம்", "முத்து", "படையப்பா", "சந்திரமுகி", "சிவாஜி" படங்களுக்காக மாநில விருதைப் பெற்றார். பத்மஸ்ரீ, பத்மபூஷன் மத்திய அரசு வழங்கிய விருதுகள்.

29. மீசையில்லாமல் நடித்த முதல் படம் "தில்லு முல்லு", முதல் முழு நீள காமெடி படமும் அதுதான்.

30. ரஜினியின் பேவரேட் பாம்பு சீன் முதலில் இடம் பெற்றது பைரவியில் புகழ் பெற்றது அண்ணாமலையில்.

31. இளைஞன், நடுத்தர வயது குடும்பஸ்தன். தள்ளாடும் முதியவர் என்ற மூன்று கெட்அப்களில் நடித்த படம் "6லிருந்து 60 வரை". ரஜினிக்கு தேசிய விருது எதிர்பார்க்கப்பட்ட படம்.

32. கோடிக் கணக்கில் சம்பளம் தர முன்வந்தும் ரஜினி இதுவரை ஒரு விளம்பரப் படத்தில்கூட நடித்ததில்லை. நான் உபயோகிக்காத ஒரு பொருளை மற்றவர்களை உபயோகிக்கச் சொல்வது தவறு என்பது அவர் கருத்து.

33. நிஜ வாழ்க்கையில் கண்டக்டராக இருந்த ரஜினி எந்தப் படத்திலும் கண்டக்டராக நடிக்கவில்லை. "ஆறு புஷ்பங்கள்" படத்தில் விஜயகுமார் கண்டக்டராக நடிக்க ரஜினி டிரைவராக நடித்திருந்தார். பாட்ஷா படத்தில் ஒரே ஒரு பாட்டில் கண்டக்டராக வருவார்.

34. ரஜினிக்கு எதிர்பாராத வெற்றியைக் கொடுத்த படம் "முரட்டுக்காளை", "சந்திரமுகி". எதிர்பாராத தோல்வியைக் கொடுத்த படம் "ஸ்ரீராகவேந்திரர்" மற்றும் "பாபா".

35. ரஜினி நடித்த ஹாலிவுட் திரைப்படம் பிளட் ஸ்டோன். ரஜினின் பல படங்கள் தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி மொழிகளில் டப் செய்யப்பட்டிருக்கிறது. நேரடியாக நடித்த இந்திப் படம் 16.

36.  தமிழ் சினிமாவில் அதிகமான புத்தகங்கள் வெளிவந்திருப்பது ரஜினி பற்றித்தான். அவரது வாழ்க்கை பற்றி நிறையபேர் எழுதியிருக்கிறார்கள். ரஜினியை சுயசரிதை எழுதச் சொல்லிக் கேட்டார்கள். அதற்கு அவர் சொன்ன பதில் "சுயசரிதை எழுதும் அளவுக்கு என் வாழ்க்கை பரிசுத்தமானதல்ல. அந்த அளவுக்கு பெரிதாக சாதித்தவனும் அல்ல. நான் நடிச்சு மக்களை சந்தோஷப்படுத்துறேன். அவர்கள் பணமாக எனக்கு திருப்பித் தந்து என்னை சந்தோஷப்படுத்துகிறார்கள் அவ்வளவுதான்" என்பார். அதுதான் சூப்பர் ஸ்டார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஜினி...! வாசகர்களும் தங்கள் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவிக்கலாம்!!

Sunday, September 2, 2012

நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள்: யுஜிசி-02-09-2012


மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி அந்த 21 போலி பல்கலைக்கழகங்களின் பெயர்களையும் யுஜிசி வெளியிட்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகங்கள், மாணவர்களுக்கு பட்டமளிக்க தகுதியற்றவை என்றும் யுஜிசி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.புதுடெல்லி: நாடு முழுவதும் 9 மாநிலங்களில் 21 கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் என்ற பெயரில் போலியாக செயல்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது.

யுஜிசி வெளியிட்டுள்ள 21 போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல்:
பீகார்:
1. Maithili University/Vishwavidyalaya, Darbhanga, Bihar
டெல்லி:2. Varanaseya Sanskrit Vishwavidyalaya, Varanasi (UP)/Jagatpuri, Delhi
3. Commercial University Ltd., Daryaganj, Delhi
4. United Nations University, Delhi
5. Vocational University, Delhi
6. ADR- Centric Juridical University, ADR House, New Delhi
7. Indian Institute of Science and Engineering, New Delhi
கர்நாடகா:
8. Badaganvi Sarkar World Open University Education Society, Gokak, Belgaum
கேரளா:
9. St. John&'s University, Koshanattam, Kerala
மத்திய பிரதேசம்:
10. Keserwani Vidyapith, Jabalpur, Madya pradesh
மகாராஷ்டிரா:11. Raja Arabic University, Nagpur
தமிழகம்:12. DDB Sanskrit University, Putur, Trichi, Tamil Nadu
மேற்குவங்கம்:
13. Indian Institute of Alternative Medicine, Kolkatta
உத்தரப்பிரதேசம்:
14. Mahila Gram Vidyapith/ Vishwavidyalaya, (Women&'s University) Prayag, Allahabad (UP)
15. Gandhi Hindi Vidyapith, Prayag, Allahabad (UP)
16. National University of Electro Complex Homeopathy, Kanpur
17. Netaji Subash Chandra Bose University (Open University), Achaltal, Aligarh
18. Uttar Pradesh Vishwavidyalaya, Kosi Kalan, Mathura (UP)
19. Maharana Partap Shiksha Niketan Vishwavidyalaya, Pratapgarh (UP)
20. Indraprastha Shiksha Parishad, Institutional Area, Noida Phase -II
21. Gurukul Vishwavidyalaya, Vrindavan, Mathura (UP)
நாடு வெளங்கிடும்............................

Wednesday, August 8, 2012

என்னய்யா ஆச்சு உங்களுக்கெல்லாம்?


லண்டன்: 5 மேட்ச், அஞ்சும் போச்சு, அனைத்திலும் தோல்வி. என்னாச்சு இந்தியாவுக்கு என்று பதறிப் போய் நிற்கின்றனர் இந்திய ஹாக்கி வீரர்கள்.
ரொம்பக் கேவலமான தோல்விகளைப் பெற்று இந்திய ஹாக்கி ரசிகர்களின் நெஞ்சில் வேலைப் பாய்ச்சியுள்ளனர் இந்திய ஹாக்கி அணியினர். ஒரு காலத்தில் உலகையே அதிர வைக்கும் அதிரடி வெற்றிகளைத் தொடர்ந்து குவித்து வந்த இந்திய ஹாக்கி அணி இன்று கண்டுள்ள தொடர் தோல்வி பெரும் அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது.

மொத்தம் 8 முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்த அணி இந்தியா. அசைக்க முடியாத சாம்பியனாக ஒலிம்பிக்கில் ஒத்தை ஆளாக கலக்கி வந்த இந்திய ஹாக்கி அணி லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட ஐந்து போட்டிகளிலும் மகா மோசமான தோல்விகளைச் சந்தித்துள்ளது.
நம்ம வீரர்களுக்கு அடிப்படையே தெரியவில்லை. பிறகு எப்படி இவர்களிடமிருந்து நாம் வெற்றியை எதிர்பார்க்க முடியும் என்று பெரும் வேதனையுடன் கூறுகிறார் முன்னாள் கேப்டன் ஜபர் இக்பால்.
இந்திய ஹாக்கி அணியின் ஒலிம்பிக் வரலாறு சாமானியமானதா... மகா பெரிய சரித்திரம் அது. 1928ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஆறு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாதான் அசைக்க முடியாத சாம்பியனாக திகழ்ந்து வந்தது. இந்தியா பெற்று வந்த ஒரே தங்கத்தை பெற்றுக் கொடுத்தது ஹாக்கி அணி மட்டுமே.

இடையில் 1960ல் தங்கத்தை நழுவ விட்ட இந்தியா, வெள்ளிப் பதக்கத்தைப் பெற்று முதல் சரிவை வெளிக்காட்டியது. ஆனாலும் விடாமல் 1964ல் மீண்டும் தங்கத்தைத் தட்டியது இந்தியா. ஆனால் 1968, 72 மற்றும் 76 ஆகிய ஆண்டுகள் இந்தியாவுக்கு சோதனையாக மாறியது. முதல் இரு ஆண்டுகளில் வெண்கலப் பதக்கத்தை வென்ற இந்தியா, 76ல் 7வது இடத்தைப் பெற்று அதிர வைத்தது.
ஆனால் 1980ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் வாசுதேவன் பாஸ்கரன் தலைமையிலான இந்திய அணி சிறுத்தை போல பாய்ந்து அத்தனை அணிகளையும் தவிடுபொடியாக்கி மீண்டும் தங்கத்தை வென்று இந்தியர்களை நிமிர்ந்து உட்கார வைத்தது.
ஆனால், அதுதான் நாம் ஒலிம்பிக் ஹாக்கியில் வாங்கிய கடைசிப் பதக்கம், தங்கப் பதக்கம் என்பதுதான் வேதனையிலும் வேதனையாகும். அதன் பின்னர் 1984 முதல் தொடர்ந்து மோசமான இடத்தையேப் பெற்று வருகிறது இந்தியா.
84ல் 5வது இடம் 88ல் 6வது இடம், 99ல் 7வது இடம், 96ல் 8வது இடம், 2000மாவது ஆண்டில் 7வது இடம், 2004ல் 7வது இடம் என சுணங்கி வந்த இந்திய ஹாக்கி அணி, 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெறத் தவறி பெரும் கேவலத்தை சந்தித்தது. இப்போது லண்டன் ஒலிம்பிக் போட்டியில் அடி மேல் அடியாக ஒரு வெற்றியைக் கூடப் பெறாமல், கிட்டத்தட்ட கடைசி இடத்தை நோக்கி தள்ளப்பட்டுள்ளது.
என்ன தவறு நமது வீரர்களிடம் என்பதுதான் புரியவில்லை. இத்தனைக்கும் வெளிநாட்டு பயிற்சியாளர், ஏகப்பட்ட வசதிகள் என சகல சவுகரியங்களோடும்தான் இந்திய ஹாக்கி அணியைப் பராமரித்து வருகின்றனர். ஆனால் நல்ல வழிகாட்டுதல் இல்லாத அணியாக நமது அணி மாறிப் போயுள்ளது. அது மட்டுமல்லாமல் ஹாக்கி சம்மேளனங்களின் சமீபத்திய பிளவுகள் சண்டைகளும் நமது அணியினரின் வளர்ச்சியை கூறு போட்டு விட்டது.
நமது நாட்டிலேயே அனுபவம் வாய்ந்த எத்தனையோ பேர் உள்ளனர். ஜபர் இக்பால் சொன்னது போல நாம் அடிப்படையை மறந்ததுதான் இந்த தொடர் கேவலத்திற்குக் காரணம். பாஸ்கரன், தன்ராஜ் பிள்ளை, அஜீத் பால் சிங் என முன்னோடிகள் வசம் நமது வீரர்களை ஒப்படைக்க வேண்டும். அதி தீவிர பயிற்சி அளிக்க வேண்டும். வெறியுடன் விளையாட வேண்டும். தங்கம் மட்டுமே நமது கண்ணில் தென்பட வேண்டும், இடையில், சிங்கமே வந்து நின்றாலும் கூட சற்றும் மனம் தளராமல் ஆட வேண்டும். அப்போதுதான் மீண்டும் நமது பெருமையை நாம் மீட்டெடுக்க முடியம்...


Thanks to -thatstamil.com

Monday, June 25, 2012

கேப்டன் கபில்தேவ் தலைமையில் உலகக் கோப்பையை வென்று இன்றுடன் 29 வருஷமாச்சு!



பெங்களூர்: இந்தியாவுக்கு முதல் முறையாக கிரிக்கெட்டில் பெருமை சேர்ந்த தினம் இது. இதே நாளில், 1983ம் ஆண்டுதான் முதல் முறையாக 'ஹரியானா சிங்கம்' கபில்தேவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி, மேற்கு இந்திய 'மகா சிங்கம்' மேற்கு இந்தியத் தீவுகளை நையப்புடைத்து உலகக் கோப்பையை வென்று வந்த தினம்.
யாருமே எதிர்பார்த்திராத ஒரு வெற்றி அது... ஆனால் கபில்தேவும், அவருடைய சில சகாக்களும் அத்தனை பேரையும் ஏறி மிதித்து வந்து கோப்பையைக் கைப்பற்றிய போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கே அளவே இல்லை... இப்போது நினைத்தாலும் புல்லரிக்க வைக்கும் அமோகமான வெற்றி அது.
லார்ட்ஸ் மைதானமே அன்று விழாக்கோலம் பூண்டது. ஒரு பக்கம் இந்தியா சாம்பியனா என்ற அதிர்ச்சி அலைகள், மறுபக்கமோ, நம்ம இந்தியாதான் சாம்பியன் என்று மைதானத்திற்குள் வெள்ளமென பாய்ந்து வந்த இந்திய ரசிகர்களின் உற்சாகப் புயல். லார்ட்ஸ் மைதானமே அதை நினைத்து இன்று கூட ஆச்சரியப்படும்.
டேவிட்டுககும், கோலியாத்துக்கும் இடையிலான சண்டை என்றுதான் இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணி இடையிலான அந்த உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிப் போட்டியை வர்ணித்தார்கள். காரணம், அப்போது இந்தியா கிரிக்கெட்டில் ஒரு சுண்டெலியாகத்தான் இருந்தது. ஆனால் மேற்கு இந்தியத் தீவுகளோ அசைக்க முடியாத மகா சிங்கமாக வீற்றிருந்தது. ஆனால் கபில்தேவ் தனது அபாரமான புத்திசாதுரியத்தால் மேற்கு இந்தியத் தீவுகளை சாய்த்து அனைவரையும் அதிர வைத்தனர் கபில்தேவும், அவருடைய சகாக்களும்.


அது 3வது உலகக் கோப்பையாகும். முதல் இரு கோப்பைகளையும் மேற்கு இந்தியத் தீவுகள் வென்றிருந்ததால், 3வது முறையும் அதுவே சாம்பியனாகும் என்றுதான் அத்தனை பேரும் நினைத்திருந்தனர். 3வது உலகக் கோப்பைக்கு புரூடென்ஷியல் கோப்பை என பெயரிட்டிருந்தனர்.
1983ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி சனிக்கிழமை நடந்த அந்தப் போட்டியின் முடிவைக் காண ஒட்டுமொத்த இந்தியாவும் ஆவலுடன் காத்திருந்தது.
கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி தனது அட்டகாசமான ஆட்டத்தால் மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த்திய அந்த தருணம் ஒட்டுமொத்த இந்தியாவும், குதூகலித்தது.
இறுதிப் போட்டியின் சில துளிகள்...
இங்கிலாந்தில் நடந்த 3வது உலகக் கோப்பைப் போட்டியில் மொத்தம்8 அணிகள் கலந்து கொண்டன. 27 போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு அணியும் 60 ஓவர்கள் ஆட வேண்டும். நீளமான போட்டிதான்.
இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. மேற்கு இந்தியத் தீவுகள் கேப்டன் கிளைவ் லாயிட் டாஸ் வென்று இந்தியாவை பேட் செய்யப் பணித்தார். அவரது கணிப்பு சரியாகவே இருந்தது. மேற்கு இந்தியத் தீவுகளின் தீப்பொறி பந்து வீச்சாளர்களின் அபாரமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 54.4 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா.
இந்தியத் தரப்பில் முதல் ஆளாக அவுட்டானவர் சுனில் கவாஸ்கர். வெறும் 2 ரன்களை மட்டுமே அவர் எடுத்தார். ஆண்டி ராபர்ட்ஸ், ஜோயல் கார்னர், மால்கம் மார்ஷல், மைக்கேல் ஹோல்டிங் என மேற்கு இந்தியத் தீவுகளின் ஜாம்பவான் பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்டிங்கை நசுக்கி பிதுக்கி விட்டனர்.
ஸ்ரீகாந்த் சேர்த்த 38
இந்தியத் தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரீகாந்த் மட்டும் 38 ரன்களைச் சேர்த்திருந்தார். அவ்வளவுதான் இந்தியா, எங்கே கோப்பையை வெல்லப் போகிறது என்றுதான் அத்தனை பேரும் நினைத்திருந்தனர்.
பலே பலே சந்து
ஆனால் நடந்தது வேறு..இந்தியாவின் பந்து வீச்சை மிக அழகாக திட்டமிட்டு பயன்படுத்தினார் கபில் தேவ். பல்வீந்தர் சிங் சந்து ரூபத்தில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சனி வந்து சேர்ந்தது. அபாயகரமான ஓபனரான கார்டன் கிரீனிட்ஜை சந்து அவுட்டாக்கிய விதம் இன்று நினைத்தும் வியப்பைத் தரும்.
ஒரே ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார் கார்டன். அதன் பிறகுதான் இந்தியாவுக்கே நம்பிக்கை வந்தது. அதேபோல வி்வ் ரிச்சர்ட்ஸ் அடித்த பந்தை பின்னோக்கி நகர்ந்து கபில் தேவ் கேட்ச் செய்த விதம் அத்தனை பேரையும் அசரடி்ததது.
படு வேகமாக ஆடிக் கொண்டிருந்த ரிச்சர்ட்ஸ் இப்படி அவுட்டாகிப் போனதால் இந்தியாவுக்கு மேலும் நம்பிக்கை அதிகரித்தது.
மொஹீந்தரின் 'மோகினியாட்டம்'
அதன் பிறகு வந்து சேர்ந்தது மொஹீந்தர் அமர்நாத்தின் 'மோகினியாட்டம்'. அபாரமாக பந்து வீசிய அவர், மேற்கு இந்தியத் தீவுகள் வீரர்களை நிலை குலைய வைத்தார். 3 முக்கிய விக்கெட்களை அவர் வீழ்த்தியதால் இந்தியாவின் கை ஓங்கியது, 'கப்'பும் கச்சிதமாக வந்து சேர்ந்தது. இறுதியில் ஆட்ட நாயகன் அவரே. வெறும் 12 ரன்களை மட்டுமே கொடுத்தார் அமர்நாத் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபக்கம் மதன்லாலும் தன் பங்குக்கு 3 விக்கெட்களைத் தூக்க மேற்கு இந்தியத் தீவுகள் அணி சரணடைந்தது. 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தனது முதல் உலகக் கோப்பையை கையில் ஏந்தியது.
இப்படி கபில் தேவ் தலைமையில் இந்தியா தனது முதல் உலகக் கோப்பையை வென்ற தினம் அது. அதன் பிறகு இன்னொரு கோப்பையைப் பெற இந்தியா 28 வருடங்கள் காக்க வேண்டியதாகப் போயிற்று.
நிச்சயம் இந்திய ரசிகர்களுக்கு இது பொன்னாள் - கபில் தேவ் போன்ற ஜாம்பவான்களைப் பற்றி கொஞ்சமாச்சும் நினைத்துப் பார்க்க வேண்டிய நன்னாள்...!

Wednesday, June 13, 2012

தேசிய மாணவர் படை (N.C.C)




தேசிய மாணவர் படை என்று ஒன்று இந்தியாவில் இருப்பது பலருக்கு தெரியுமா என்று எனக்கு தெரியவில்லை........ஆனால் நான் பார்த்த வரை அதில் இருந்தவர்களை தவிர மற்றவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.............. இந்த வலைப்பக்கத்தில் என். சி. சி (National Cadet Corps) யை பற்றியும் என்.சி.சி எப்படி செயல் படுகிறது என்பதை பற்றியும், என்.சி.சி மாணவர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்படுகிறார்கள் என்பதை, எனக்கு தெரிந்த அளவில் பதிக்க நினைக்கிறேன், ஏனெனில் என்.சி.சி யை மிகவும் நேசித்து அதிலே வாழ்ந்து காலத்தின் கட்டாயத்தால் அதை துறந்து இன்றும் அதைப்பற்றி நினைத்து பெறுமை படுபவன். இன்றளவும் எனக்கு என்.சி.சி அல்லாத நண்பர்கள் ஒரு சிலரே, இதில் நண்பர்கள் பற்றி குறிப்பிடுவதற்க்கு காரணம், என்னவோ தெரியவில்லை, என்.சி.சி யியில் இருக்கும் நண்பர்களது எண்ணங்கள் கிட்ட்த்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும்.....(இங்கு நான் குறிப்பிட்டது நான் பார்த்த நண்பர்களை மட்டுமே).............. ரம்பம் போட்டது போதும் விசயத்துக்கு வாடா டேய்!!!!!! அப்படிங்கரீங்களா வந்துட்டேன்.......  

இந்தியாவின் பட்ஜெட்டில் அதிகமாக நிதி ஒதுக்கப்படுவது இந்திய அரசின் பாதுகாப்பிற்க்காக தான் (இராணுவம்). இதற்கு அடுத்தாற் போல் ஒதுக்கப்படுவது பெட்ரோல் இறக்குமதிக்கு. பெட்ரோலை பற்றி நாம் பேச தேவையில்லை, ஏனெனில் காங்கிரஸ் கட்சி அதை கவனித்துக்கொள்ளும். இந்திய பாதுகாப்பிற்க்கு  ஒதுக்கப்படும் நிதியில் ஒரு பாதி இராணுவத்திற்க்கும் மீதி சரி பாதி எதிர் கால இராணுவ வீர்ர்களை உருவாக்குவதற்க்கும் செலவளிக்கப்படுகிறது. இராணுவம் என்றாலே பலருக்கு நினைவுக்கு வருவது துப்பாக்கி!!!!! (ஒரு சிலருக்கு வேறு ஒன்று வரும்). எதிர்கால இராணுவ வீர்ர்களை உருவாக்குவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது தேசிய மாணவர் படை (என். சி. சி). இந்தியாவில் உள்ள (Andhra Pradesh, Andaman and Nicobar Islands, Arunachal Pradesh, Assam, Bihar, Chhattisgarh, Dadar and Nagar Haveli, Daman and Diu, Delhi, Goa, Gujarat, Haryana, Himachal Pradesh, Jammu & Kashmir, Jharkhand, Karnataka, Kerala, Lakshadeep, Madhya Pradesh, Maharashtra, Manipur, Meghalaya, Mizoram, Nagaland, Orissa, Pondicherry, Punjab, Rajasthan, Sikkim, Tamil Nadu, Tripura, Uttarakhand, Uttar Pradesh, West Bengal) மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்த்து உள்ள 35-ஐ என்.சி.சி-காக 17 Directorate-ஆக சேர்த்து அமைக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தில் இருப்பது போல் பதவி, ரேங்க், என்.சி.சி-யிலும் உள்ளது. அதைப்பற்றி விரிவாக அடுத்தப்பதிவில் பார்ப்போம். இப்பதிவில் ஏதெனும் பிழை இருந்தால் பின்னூட்ட்த்தில் தெரிவிக்கவும்.