Friday, December 24, 2010
Tuesday, December 14, 2010
கனவு ..........
பகலில் உன்னை காண முனைந்தால் வேலை வேலை என்று கூறுகிறாய் ...............
என்ன வேலை என்று கேட்டால் இரவில் உனக்கு தருவதற்காக இனிய கனவுகளை செய்து கொண்டிருக்கிறேன் என்றுசொல்கிறாய் .........................................
உடனே ஒரு சத்தம் .................
விழித்து பார்க்கும் ஒரு ஆண் மகன் நினைக்கிறான் என்ன ஒரு இனிமையான கனவு !!!!!!!!!!!!!!!!!
ஆம் இது கனவு .............................
தன்னை விரும்பாத ஒரு பெண்ணை தான் மட்டும் விரும்பும் ஒரு ஆண் மகனின் கனவு .................
கனவு பலிக்குமா ?????????????????
Monday, December 13, 2010
நாடாளுமன்ற அமளி-பொறுப்பற்ற கட்சிகளால் ரூ. 146 கோடி மக்கள் வரிப்பணம் வீண்
இந்த வரிப்பணத்தை எந்த ஒரு நல்ல காரியத்திற்காகவும் செலவிடவில்லை. மாறாக, ஒன்றுமே செய்யாமல் இந்த பேரிழப்பு ஏற்பட்டுள்ளது வேதனை அளிப்பதாக உள்ளது.
நவம்பர் 9ம் தேதி தொடங்கி டிசம்பர் 13ம் தேதி வரை நடந்த குளிர்காலக் கூட்டத் தொடரால்தான் இந்த பெரும் நஷ்டம். இந்த நாட்களில் ஒரு நாள் கூட அவைகள் செயல்பட முடியவில்லை. தினசரி கூடும், பத்து நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்டு விடும். இப்படியே முதல் நாளிலிருந்து கடைசி நாள் வரை விளையாடி வந்தனர் எதிர்க்கட்சி எம்.பிக்களும், ஆளுங்கட்சியினரும்.
இந்த எம்.பிக்களின் திருவிளையாடலுக்காக செலவான தொகைதான் ரூ. 146 கோடி. ரூ. 1.74 லட்சம் கோடி நஷ்டத்தை ராஜா ஏற்படுத்தினார் என்று கூறி அதற்கு ஜேபிசி விசாரணை கோரி எதிர்க்கட்சியினர் நடத்திய அமளி துமளிகளால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் இந்த ரூ. 146 கோடி.
எதிர்க்கட்சிகள் சபையை நடத்த விடமாட்டார்கள் என்ற நிலை தெளிவாக தெரிந்தபோதிலும், நாடாளுமன்றத்தை ஒத்திவைக்காமல், நாட்டு மக்களிடம் அவர்களுக்கு கெட்ட பெயர் ஏற்படட்டும் என்ற எண்ணத்தில் வேண்டும் என்றே நாடாளுமன்றக் கூட்டத்தை ஒத்தி வைக்க முயலாமல், வேடிக்கை பார்த்து வந்த காங்கிரஸ் அரசும் கூட இந்த நஷ்டத்திற்கு பொறுப்பேற்றாக வேண்டும்.
நடப்பு நிதியாண்டில் லோக்சபாவுக்கான மொத்த பட்ஜெட் ரூ. 347 கோடியாகும். அதில், கிட்டத்தட்ட பாதிப் பணத்தை இப்படி ஒன்றுமே செய்யாமல் வீணடித்துள்ளனர் பொறுப்பற்ற நமது எம்.பிக்கள்.
இந்தப் பணத்தைக் கொண்டு நூறு கிராமங்களுக்கு ஏதாவது நல்லது செய்திருக்கலாம். ஏதாவது வறுமை ஒழிப்புத் திட்டத்திற்குப் பயன்படுத்திருக்கலாம். ஆனால் இப்படி எந்த நல்லதுக்கும் பயன்படாமல் மக்கள் வரிப்பணத்தை ஒன்றும் செய்யாமல் வீணடித்திருப்பது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Thursday, December 9, 2010
Monday, November 29, 2010
Monday, November 15, 2010
Tuesday, November 9, 2010
Friday, October 29, 2010
Thursday, October 21, 2010
Wednesday, September 29, 2010
தூறல் வந்தால் கோலங்கள் அழியும் ,காலம் வந்தால் கல்வெட்டும் அழியும் ,என்றும் பெண்ணே என் காதல் அழியாதே ....................
அடி கோயில் மூடினால் கூட கிளி கவலை படுவதே இல்லை ..........அந்த வாசல் கோபுரம் மீது அதன் காதல் குறைவதே இல்லை ..................... உன் காதல் என்னிடம் இல்லை நான் கரைக்க நினைக்கிறேன் கல்லை .................
உந்தன் காலடி என்றும் எந்தன் வேரடி ...............
Monday, August 30, 2010
Wednesday, August 11, 2010
Tuesday, August 3, 2010
Thursday, May 27, 2010
பிறைச்சந்திர
மல்லிகை மொட்டுக்கள்
உன் கூந்தல் ஆகாயமேற
பூரணச் சந்திரன்கள்!
உன் பாதங்கள்
விட்டுச் சென்ற
சுவடுகளில் எல்லாம்
பட்டாம் பூச்சிகள்
மொய்த்து கிடக்கின்றன!
உன்
கால் சுவட்டில்
கால் வைத்து
நடந்து வந்தேன்!
திரும்பி பார்த்தால்
கால் சுவடு
இருந்த இடமெல்லாம்
காதல் சுவடு!
குளத்து நீருக்கு
குனிந்து முத்தமிட்டபடி
இருந்தவனை பார்த்தவர்கள்
கவிஞனல்லவா ரசிக்கிறான்
என்றவாறு நகர்ந்தார்கள்!
அவர்களுக்கு எப்படித்தெரியும்
குளித்துப் போன
உன் பிம்பம்
அதில் தங்கியிருப்பது!
எல்லா ஊர் மீன்களும்
பாசித் தின்று உயிர்வாழும்
நம்மூர் மீன்கள் மட்டும்தான்
உன் அழகை தின்று
உயிர் வளர்க்கின்றதுகள்!
தாமரை மட்டுமென்ன
இவ்வளவு அழகென்பவளே!
உஷ்!ரகசியம்!
நீ குளிக்கையில்
கரைந்த ஒருதுளி
அழகுதான் காரணி!
Sunday, May 16, 2010
Friday, May 7, 2010
Wednesday, April 28, 2010
ஆயிரம் பூக்கள்
சரஸ்வதி ,.....
Tuesday, April 27, 2010
Monday, April 26, 2010
Saturday, April 24, 2010
ஆகாயம் தேடுதம்மா
Saturday, April 17, 2010
Friday, April 16, 2010
എന്രും ഉണ്ണ നിനൈവുടന് നാന് ..............................
Chak De India Title Track
Movie : Chak De India (2007)
Music Director: Salim Merchant, Sulaiman Merchant
Director: Shimit Amin
Producer: Aditya Chopra
Lyrics: Jaideep Sahni
Singers :Sukhwinder Singh, Salim Merchant, Marianne D’Cruz
Cast: Shah Rukh Khan, Vidya Malvade
kuch kariae (2)
nas nas meri khode, hai, kuck kariae
kuch kariae (2)
Bas bas bada bode, aab, kuck kariae
ho koi tho chal zid padiye
tu bhetar ya mariae (2)
chak de oh chak de india (4)
come on india
now where to run now where to hide
lets take our time, lets do or die (2)
poocho mein galion mein
rashan ki phalio mein
belion mein beejon mein
yeedon mein theejo mein
rateon ke gano mein
filmon ke gaano mein
sadko ke ghadon mein
baaton ke adon mein
ghuntale ke bharle
tasbar bar karle
rehna na yaar peeche
kitna bhi koi gheete
tashair naam bas hai jeen
zid hai jho zid hai ji
kisna yuhi phisna yuhi (2)
bas kariein………..
ho koi tho chal zid padiye
tu bhetare ya mariae (2)
chak de oh chak de india (4)
come on india
now where to run now where to hide
lets take our time till we drop (2)
chak de………
ladthi patango mein
bhirti umongon mein
kehlo ke melo mein
palkathi ki railing mein…..
gunno ki nette mein
khatar mein cheetain mein
dhoondo to mil ghve
pathaa vo heaton mein
thang hi sow aaj nikre
aur khoolke aag bhikile
maan jaye eise hoti
rug rug machalke bholi
tashair naam bas hai jeen
zid hai jho zid hai ji
kisna yuhi phisna yuhi (2)
bas kariein………..
ho koi tho chal zid padiye
tu bhetare ya mariae (2)
chak de oh chak de india (4)
come on india
ab kuch kariea……..
Tuesday, February 16, 2010
இதுவும் ஒரு காதல் கதை
வந்தாரு, பார்த்தாரு, போயிட்டாரு,
அவரோட பேசினியா?
ம், பேசினேன், அரைமணிநேரம்,
என்ன சொன்னார்?
அவரைப்பத்தி சொன்னாரு, என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது, என்னென்ன பழக்கம் உண்டு, எல்லாம் சொன்னாரு,
உன்னைப் பத்தி என்ன சொன்னார்?
ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னாரு,
நீ என்ன சொன்னாய்?
நானும் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டேன்,
என்னது, பிடிச்சிருக்குன்னு சொன்னியா?
ஆமாம்,
சொல்றதுக்கு முன்னாடி, என் முகம் உனக்கு ஞாபகம் வரலையா?
வந்தது, ஆனா, அதுக்கும் முன்னாடி, எங்க அப்பாவோட முகம் ஞாபகம் வந்தது, அதனால் தான்,
கொஞ்சம் கூட நினைவில்லையா, எத்தனை நாள், எத்தனை போன் கால், எத்தனை மெசேஜ், எவ்வளவு மணி நேரம் பேசியிருப்போம், எல்லாம் ஒரு அரை மணி நேரத்தில் முடிஞ்சு போச்சா?
புரியாம பேசாதே, நான் முதலில் இருந்தே சொல்லிக்கிட்டுருந்தேன், இது நடக்காதுன்னு, நீ தான் பேசிப் பேசி என் மனச மாத்தினாய்,
நீயும் தான் மனசை மாத்திக்கிட்ட, எத்தனை நாள் சொல்லியிருக்கே, "நான் இல்லாம உன்னால வாழவே முடியாதுன்னு",
உண்மை தான், ஆனா என் அப்பாவோட முகத்தைப் பார்த்தா, அவர்கிட்ட சொல்லி மனசை நோகடிக்கத் தோணலை,
நிஜமாதான் சொல்றியா? இது தான் உன் முடிவா?
ஆமாம், நல்ல யோசிச்சிட்டுத்தான் இந்த முடிவை எடுத்திருக்கேன்,
சரி, அப்புறம் உன் இஷ்டம், போறதுக்கு முன்னாடி ஒண்ணே ஒண்ணு குடுத்துட்டு போ,
என்ன வேணும் உனக்கு? என்னைத் தவிர எது வேணும்னாலும் கேளு,
கவலைப்படாதே, உன்னையெல்லாம் கேட்கமாட்டேன்,
அப்புறம்,
ஒவ்வொரு நாளும் குறைஞ்சது, ரெண்டு மணி நேரமாவது, போன்ல பேசியிருப்போம், ஏதோ என் கம்பெனி சியூஜில வாங்கின கனெக்க்ஷன்கிறதால பில்லு எகிறாம இருந்தது, ஏற்கனவே மூணு நம்பர் என் பேர்ல வாங்கிட்டேன், வேற கிடைக்காது, அதுனால அந்த சிம்கார்டை மட்டும் கழட்டிக் குடுத்துட்டு போ, அடுத்து வருபவளுக்குகொடுக்கணும்.
பின்குறிப்பு
இதைக் கவிதையாக எழுதவே எண்ணியிருந்தேன், சரியான வார்த்தைகள் என்னிடம் சிக்காததால், நீங்கள் தப்பிவிட்டீர்கள், கவிஞர்கள் யாராவது இதனை கவிதையாக்க முயற்சிக்கலாம் (இங்கோ அல்லது உங்கள் பதிவிலோ).
Sunday, February 14, 2010
வெட்கம் .... மானக்கேடு
இங்கு நடக்கும் கொடுமையை பாருங்கள் ,வேறு கட்சி கொடியை காலில் மிதித்தாலே உச்ச நீதி மன்றம் வரை போகும்
நம் நாட்டு அரசியல் வாதிகளுக்கு நம் நாடு தேசிய கொடி எரிக்க படுகிறது .அது கண்ணுக்கு தெரிய வில்லயா,இல்லை தெரிந்து தெரியாமல் இருந்து கொண்டார்களா,இக்கொடுமை நடப்பது நம் நாட்டில் அல்ல நம் பாசமிக்க அன்புமிக்க நமக்கு எப்பொழுதுமே நல்லதே செய்து கொண்டிருக்கும் நமது அண்டை நாடான பாகிஸ்தான் தான் .அவர்கள் வீட்டில் கொசு கடித்தால் அதை விரட்டுவதற்கு நம் தாய் திரு நாட்டின் தேசிய கொடியா கிடைத்தது .எப்படி தெலுங்கானா,நாம் கட்சி மந்திரிகள் எல்லாம் அடுத்த கட்சிக்கு தாவுவதை எப்படி தடுப்பது ,இந்த முறை தேர்தலில் என்ன இலவச பொருள் கொடுத்து எப்படி ஒட்டு வாங்கலாம் என்று சிந்திப்பதற்கே நமக்கு நேரம் போத வில்லை இதில் நாட்டு கோதியவா இவர்கள் காக்க போகிறார்கள் ,இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால் இதை படம் பிடித்தவன் ஒரு இந்தியன் ,இதே இடத்தில் ஒரு ஏழை விவசாயியோ அல்லது ஒரு இளைஜனோ இருந்திருதால் கொடிக்கு பதில் தான் கருகியிருப்பான் ,இலங்கை தமிழர்களுக்காக தன்னுயிர் நீத்த முத்து குமாரை பார்த்தாவது இந்த இந்திய அரசியல்வாதிகள் திருந்தட்டும் ,இந்தசெயலுக்கு
பாகிஸ்தான் வெட்க பட வேண்டும் ,இந்தியா வெகுண்டு எல வேண்டும், அது நடக்குமா ????????????
இப்படிக்கு
தேச பற்று மிக்க ஒரு இந்தியன்
Thursday, January 21, 2010
தெரிந்து கொள்ளுங்கள்
- கொலம்பியா கிராமபோன் வாஷிங்டனில் அமைக்கப்பட்டது(1889)
- உலகின் முதல் பயணிகள் ஜெட் விமானம் சேவை துவங்கப்பட்டது(1952)
- ஆப்பிள் மக்கிண்டொஷ் கணினி அறிமுகப்படுத்தப்பட்டது(1984)
- ஆர்க்குட் துவங்கப்பட்டது (2004)
- கால்பந்தாட்ட போட்டியின் நேரடி வர்ணனை வானொலியில் முதல் முறையாக ஒலிபரப்பப்பட்டது(1927)
Wednesday, January 20, 2010
படிப்பறிவில் இன்னமும் பின்தங்கி இருக்கிறது இந்தியா: யுனெஸ்கோ
'அனைவருக்கும் கல்வி' திட்டம் தொடர்பான உலகளாவிய கண்காணிப்பு அறிக்கையை ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு இன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், உலகம் முழுவதும் 75.9 கோடி மக்கள் (18 வயதுக்கு மேற்பட்டோர்) படிப்பறிவு இல்லாதவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து படிப்பறிவில்லாதோரின் எண்ணிக்கை அதகளவிலேயே இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலக அளவில் படிப்பறிவில்லாத மக்களில் பாதிபேர் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் சீனா ஆகிய நான்கு நாடுகளில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
மக்களிடையே படிப்பறிவை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் வேதனை தரும் விதத்தில் ஆமை வேகத்தில் இந்த நாடுகளில் நடப்பதாகவும் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, ஆரம்பக் கல்வி படிக்க வேண்டிய வயதில் உள்ள சிறுவர்களில் 7.2 கோடி பேர் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதாகவும், 18 வயதுக்கு மேற்பட்ட மாணவ பருவத்தினரில் 7.1 கோடி பேர் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.