Tuesday, September 20, 2011

சினிமா பாடல் ஜோக்ஸ்,,,,,,,,,

1.நான் பாடும் மவுன ராகம் கேட்க வில்லையா?– பாடல் வரி

மவுன ராகம் எப்படிடா கேக்கும்

2.ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு– பாடல் வரி

அடேங்கப்பா அவ்வளவு பெரிய கோப்பையா

3.உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா?– பாடல் வரி

உன் கருப்பான கண்ணம் சிவப்பாகலாமா செருப்படி படலாமா சம்மதம் தானா?

4.வானத்த பாத்தேன் பூமிய பாத்தேன்– பாடல் வரி

முதல்ல ரோட்டை பார்த்து போடா டேய்..போய் சேந்துர போற!!!

5.என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா?– பாடல் வரி

அங்க உயிர் போய்டுச்சுன்னு கத்துறாங்க …உனக்க இங்க பாட்டு
கேட்க்குதா..ஓடி போயிடு…

6.நலம் நலமறிய ஆவல்!–பாடல் வரி

இப்படிக்கு முனுசாமி

7.அதாண்டா இதாண்டா அருனாச்சலம் நாதாண்டா–பாடல் வரி

சார்,கொஞ்சம் மரியாதையா பேசுங்க!!!

8.மழை வருது மழை வருது குடை கொண்டு வா—பாடல் வரி

யோவ் யாருய்யா ..அது வானிலை அறிவிப்பாளர ஹீரோவா போட்டது??

9.காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்—பாடல் வரி

அறிவே கிடையாதா? தலை கீழா உட்கார்ந்தா எழுதுவே?

10.இரவா பகலா நிலவா—பாடல் வரி

கண்ணாடிய போடுங்க முதல்ல!!

11.ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ—பாடல் வரி

நம்ம வானிலை அறிக்கையை நம்புனாலே இப்படித்தான்!!!


12.அவள் பறந்து போனாலே—பாடல் வரி

அதுக்கென்ன பண்றது வந்தவன் அமெரிக்கா மாப்பிள்ளை ஆச்சே!!

Thursday, September 8, 2011

தலையணை கண்ணீர் .........- படித்ததில் பிடித்தது .................



ப்போதெல்லாம் தனிமை வலிக்கவில்லை
இந்த நாட்களில் நீயில்லாமல்
வாழ பழகி கொண்டுவிட்டேன்
உன் நினைவுகள்இல்லாமல் தான்
வாழ முடியவில்லை...

கடந்து போன வாழ்க்கையை
நினைத்து பார்ப்பதா
இல்லை உன்னுடன்
வாழ நினைத்த வாழ்க்கையை
கனவாய் காண்பதா என்று யோசித்து
முடிப்பதற்குள் விடிந்துவிடுகின்றன
என் இரவுகள்...

ஏன் என்று தெரியாமலே
அழுது தலையணைகள்
நனைகிறது என் இரவுகளில்...

ஒரே நகைச்சுவைக்கு
பலமுறை சிரிக்க
இயலாதபோது ஒரே துயரத்திற்கு
பலமுறை கண்ணீர் வடிப்பது
ஏனோ எனக்கு புரியவில்லை...


அடுத்த நாள் வழக்கம்போல
துவங்குகிறது... இயந்திரமாய்
நகரும் வாழ்க்கையில்
இன்றாவது எதிர்பார்க்கிறேன்
உன்னையும் உண்மையாய்
சிர்ப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தையும்,
கிடைக்காது என்று தெரிந்திருந்தும்...

Saturday, September 3, 2011

தாய்



கருவறையில் சுமந்து காயம் பல அடைந்து
மாதம் பத்து சென்று பக்குவமாய் பெற்றெடுத்தாய்
அப்பச்சிளம் குழந்தையை பத்தியம் பல இருந்து
பாதுகாத்து வளர்த்து தொட்டிலில் தூக்கிபோட்டு
தாலாட்டுப் பாட்டு பாடி துங்கவைத்து ,
பாசத்தை அள்ளிதந்து பள்ளிக்கு அணுப்பி
பாதை பார்த்து அமர வேண்டும்,
உன்னுயிர் தந்து அப்பெண்ணுயிர் காத்த உன்னை,
முதுமை வந்தாலும் முகம்மது நபி அவர்கள்
உறைத்தது போல் அக்குழந்தை தேடுமம்மா
தாயுனது காலடி கவனத்தை...........