Wednesday, February 6, 2013

எழுத்தாளர் சுஜாதாவின் சொல் உபயம்.......



சுஜாதாவின் தீவிர இரசிகனாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் எனக்கு அவ்ரது சொல் உபயங்கள் மீது அளவற்ற ஆச்சர்யம்...........

தற்பொழுது படித்துக்கொண்டிருக்கும் மூன்று குற்றங்கள் என்ற புத்தகத்திலிருந்து ஒரு சிறந்த உதாரணம்...................

வக்கில் கனேஷ், வசந்த் மற்றும் அவரது நண்பர்களுக்கிடையே நடக்கும் ஒரு சின்ன உரையாடல்..........

பொதுவாக நாம் சதுரங்கம் விளையாடும் போது ஒருவர் காய்களை வெட்டிக்கொண்டிருந்தால் மற்றவருக்கு நாம் கொடுக்கும் அறிவுறைக்கு நாம் உபயோகிக்கும் வரிகள்

“பாத்து சார் எல்லா காய்களையும் வெட்டிருவான், மோசமான பையன்”

ஆனால்........ சுஜாதா ...........

“ பாத்து சார், போர்டை கிளீன் பன்னிடுவான்”............

மற்றொன்று.............................

கனேஷும் வசந்தும் உயரமான மலை உச்சிக்கு சென்று கீழே பார்க்கிறார்கள்....................

சாதாரன மொழி வழக்கு.....................

”ரொம்ப உயரம் இருக்கும் போல இருக்கே !!! என்ன ஒரு 50 அடி இருக்குமா”

சுஜாதாவினுடையது.....................

“ கீழே விழுந்தா மண்டை உடையரதுக்கு பத்து நிமிஷம் ஆகும் போல இருக்கே”

இதே போன்று நிஜமாக எங்கள் கண் முன்பு நடந்தது……………

நானும் என் நண்பரும் பேருந்தில் படியில் நின்று பயணம் செய்து கொண்டிருந்தோம் பாண்டிச்சேரியை நோக்கி……………
ஒரு நிறுத்ததில் ஒருவர் ஏறினார்…..எங்கள் அருகில் நின்று கொண்டிருந்தார்……..கண்டக்டர் பஸ்ஸின் முன்பக்கத்திலிருந்து பின் பக்கம் வந்து என்னிடம் யாராவது ஏறினார்களா என்று சைகையில் கேட்டார்… நானும் ஏறியவரைப் பாத்து இவர் மட்டும் ஏறினார் என்று ஏறியவருக்கு தெரியாமல் கண்டக்டரிடம் சொன்னேன்………..

ஆனால் ஏறியவர் டிக்கெட் எடுப்பதாக தெரியவில்லை……………

இதைப் பாரத்துக்கொண்டே இருந்த நடத்துனருக்கும் புதிதாக ஏறியவருக்கும் நடந்த உரையாடல்…..

கண்டக்டர் : ஏன்ப்பா என்னதான் தேடுரியா !!!!!!!!

ஏறியவர் : நான் ஏங்க உங்களை தேடனும்!!!!!!!!!!!!!!!!

கண்டக்டர் : இல்ல பஸ்ஸில ஏறுனவுடனே டிக்கெட் எடுக்க எல்லாரும்
கண்டக்டரதானே தேடுவாங்க!!!!!!!!!!!!!!!

(இதுக்கப்பரம் தான் அவர் டிக்கெட் எடுத்தார், நாங்கள் பின்னே நின்று சிரித்து கொண்டிருந்தோம், ஏறியவர் சிறிது நேரம் கழித்து (தனக்கு ஏற்கனவே கண்டக்டர் “பல்பு” கொடுத்துட்டார், அவர்க்கு ரிட்டன் பல்பு கொடுக்கனும்ன்னு நினைச்சிருப்பார் போல்!!!!!, மறுபடியும் அவர்களுக்கிடையே உரையாடல் தொடர்ந்தது….)

ஏறியவர் : கண்டக்டர், டிக்கெட் கொடுத்துட்டிங்களா எனக்கு!!!!!!!

கண்டக்டர் : ஏண்ப்பா!!!! எல்லாரும் பாண்டி-ல ருந்து ரிட்டன் வரும் போதுதான் இப்படிலாம் பேசுவாய்ங்க……. நீ என்ன போகும் போதே ஆரம்பிச்சுட்டியா…………………

(மறுபடியும் நாங்கள் சிரித்து கொண்டே பயணத்தை தொடர்ந்தோம்)