Thursday, May 27, 2010

Butterfly பிறைச்சந்திர
மல்லிகை மொட்டுக்கள்
உன் கூந்தல் ஆகாயமேற
பூரணச் சந்திரன்கள்!


உன் பாதங்கள்
விட்டுச் சென்ற
சுவடுகளில் எல்லாம்
பட்டாம் பூச்சிகள்
மொய்த்து கிடக்கின்றன!

உன்
கால் சுவட்டில்
கால் வைத்து
நடந்து வந்தேன்!
திரும்பி பார்த்தால்
கால் சுவடு
இருந்த இடமெல்லாம்
காதல் சுவடு!

குளத்து நீருக்கு
குனிந்து முத்தமிட்டபடி
இருந்தவனை பார்த்தவர்கள்
கவிஞனல்லவா ரசிக்கிறான்
என்றவாறு நகர்ந்தார்கள்!
அவர்களுக்கு எப்படித்தெரியும்
குளித்துப் போன
உன் பிம்பம்
அதில் தங்கியிருப்பது!

எல்லா ஊர் மீன்களும்
பாசித் தின்று உயிர்வாழும்
நம்மூர் மீன்கள் மட்டும்தான்
உன் அழகை தின்று
உயிர் வளர்க்கின்றதுகள்!

நம்மூர் குளத்து
தாமரை மட்டுமென்ன
இவ்வளவு அழகென்பவளே!
உஷ்!ரகசியம்!
நீ குளிக்கையில்
கரைந்த ஒருதுளி
அழகுதான் காரணி!

Sunday, May 16, 2010

















நீ அருகில் இருக்கையில் நமக்கிடையேயான தூரம் அதிகமாக உணர்ந்தேன் ,நீயோ இன்று தூரத்தில் ,எனினும் நமக்கிடையேயான தூரம் இரு இமைகளுக்கு இடையே உள்ள தூரத்தை விட குறைவாய் உணர்கிறேன் ...................

Friday, May 7, 2010























என் பெயரை தனியே
எழுதிப் பார்ப்பதை விட
உன் பெயருடன்
சேர்த்து எழுதுவதைத்தான்
என் பேனாவும் விரும்புகிறது...
அதுவும் என்னைப் போலவே..!