Saturday, April 24, 2010


ஆகாயம் தேடுதம்மா
தன் ஆசை நிலாவை
கார்மேகம் மூடியதோ
சேரவிடாமை...
பார்முழுதும் தேடுகிறேன்
என் காதல் நிலாவை
யாரிதயம் கூறியதோ
பேசவிடாமை...

பொய்பேசும் விழியிரண்டை
மைபூசி மறைத்துவிட்டு
கைவீசி என்னை அழைத்தவளே...
கடைசிவரை துணையிருப்பேன்
கலங்காதே என்றவளே...
இடைவழியே மறைந்துவிட்டாய்
நடுவழியே நிற்கின்றேன்...

என் காதல்...
உண்மையானதா...இல்லை
ஊமையானதா ?

No comments:

Post a Comment