Thursday, September 8, 2011

தலையணை கண்ணீர் .........- படித்ததில் பிடித்தது .................



ப்போதெல்லாம் தனிமை வலிக்கவில்லை
இந்த நாட்களில் நீயில்லாமல்
வாழ பழகி கொண்டுவிட்டேன்
உன் நினைவுகள்இல்லாமல் தான்
வாழ முடியவில்லை...

கடந்து போன வாழ்க்கையை
நினைத்து பார்ப்பதா
இல்லை உன்னுடன்
வாழ நினைத்த வாழ்க்கையை
கனவாய் காண்பதா என்று யோசித்து
முடிப்பதற்குள் விடிந்துவிடுகின்றன
என் இரவுகள்...

ஏன் என்று தெரியாமலே
அழுது தலையணைகள்
நனைகிறது என் இரவுகளில்...

ஒரே நகைச்சுவைக்கு
பலமுறை சிரிக்க
இயலாதபோது ஒரே துயரத்திற்கு
பலமுறை கண்ணீர் வடிப்பது
ஏனோ எனக்கு புரியவில்லை...


அடுத்த நாள் வழக்கம்போல
துவங்குகிறது... இயந்திரமாய்
நகரும் வாழ்க்கையில்
இன்றாவது எதிர்பார்க்கிறேன்
உன்னையும் உண்மையாய்
சிர்ப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தையும்,
கிடைக்காது என்று தெரிந்திருந்தும்...

4 comments: