Monday, December 26, 2011

திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் நண்பர்களுக்கு ......................




பஸ் டிக்கெட் கட்டண உயர்வுக்கு பிறகு சந்தோசமாய் இருப்பது இரயில்வே நிர்வாகம்தான் !!!!!!!!!!!!!!!!!!! ஆம் கூட்டம் பின்னி பெடல் எடுக்கிறது...... அந்த கூட்டத்தில் நானும் ஒருவன் ...................சிலர் ரயிலை மட்டுமே நம்பி இருந்த காலம் மீண்டும் வந்துவிட்டதோ என்று பேசிக்கொண்டிருந்தார்கள் (இரயிலுக்குள்தான்) .........

காரணம் அவ்வளவு கூட்டம் .................இத்தனை நாளை டிக்கெட் கவுண்டர்களில் தூங்கி கொண்டு இருந்தார்கள் (திருச்சியில் இல்லையப்பா).........

இப்ப இவன் என்னதான் சொல்ல வரான் என்று நீங்கள் மனசுக்குள் கேட்பது என் காதில் விழுகிறது ......... மேட்டருக்கு வரேன் ................ இப்பொழுதெல்லாம் நான் எங்கள் ஊருக்கு (தஞ்சைக்கு) இரயிலில் தான் செல்கிறேன் ........... ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்காதீர்கள் !!!!!!!!!!!!! நாலைந்து முறை டிக்கெட் எடுக்க முடியாமல் அடுத்த நிலையத்தில் எடுத்த கதையும் உண்டு ......... எல்லோராலும் அது முடிவதில்லை .........காரணம் இடைப்பட்ட நேரம்.............சில சமயம் இரயிலில் ஏறாமல் அதற்க்கு டாட்டா காட்டியவர்களும் உண்டு (நானும் பாத்திருக்கிறேன்) .......... சில நாள் முன்பு ரயில்வேயின் பதிவு பெற்ற அலுவலகம் என்ற பெயரில் ஒரு போர்டு பார்த்தேன் (ஜங்ஷன் ரவுண்டானா அருகில்) ............

வழக்கம் போல சண்டே ஊருக்கு போகும் போது நண்பனின் அறிவுரையின் பேரில் அந்த கடைக்கு சென்றேன் .............. ஜங்ஷன் டிக்கெட் கவுண்டரில் வழங்கும் முன்பதிவில்லாத அணைத்து டிக்கெட்டுகளும் இங்கும் கொடுக்கிறார்கள் அதுவும் மிகவும் வேகமாக பணியாற்றுகிறார்கள் (வேகமாக என நான் குறிப்பிட காரணம் ஜன்க்சனில் கொஞ்சம் வயதானவர்கள் பணியாற்றுகிறார்கள். அதற்காக அவர்களை பொறுப்பற்றவர்கள் என்றெல்லாம் கூறவில்லை) இளங்கன்று பயமறியாது என்று பெரியோர் சொல்ல கேள்வி பட்டிருக்கிறேன் .................. சிலர் வருந்தும் விஷயம் என்னவென்றால் ஜன்க்சனை விட இங்கு டிக்கெட் ஒரு ரூபாய் அதிகம் ..............அது அவர்கள் கமிசன் போலும் ...............(ஒரு ருபாதான்பா அதிகம்) அவர்களுக்கென்று சம்பளம் ஏதும் இரயில்வே நிர்வாகம் வழங்குவதில்லை என்றுதான் நினைக்கிறேன்..........அந்த ஒரு ரூபாய்களை வைத்துதான் கடை வாடகை, சம்பளம், கரண்ட் பில் போன்றவைகளை எல்லாம் சாமாளிக்கிறார்கள் போலும் ...........(இது ஒன்னும் பிளாக் டிக்கெட் இல்லையப்பா..............) இரயில்வே நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட ஒரு நிறுவனம் ............... டிக்கெட் எடுக்காமல் சீக்கிரம் வந்தும் டி டி ஆருக்கு பயந்து பிளாட்பாரத்தில் நின்று ரயிலுக்கு டாட்டா காட்டுவதை காட்டிலும், எதோ வீரம் வந்தது போல் (விஜய்க்கு அம்மா செண்டிமெண்ட் வந்து எதிரிகளை அடித்து துவைப்பது போல்) அடுத்த நிலையத்தில் எடுக்கலாம் என நினைத்து ஏறி நமது (ஈழத்தமிழர்கள்,முல்லை பெரியாறு அனை, ராசா போல) போதாத காலம் டி டி ஆரிடம் மாட்டி தண்டம் அழுவதை விட ஒரு ரூபாய் அதிகம் கொடுத்து சன்னல் ஓரத்தில் உட்காந்து கொண்டு போவது எவ்வளவோ மேல் ............. நண்பர்களே ஒரு ரூபாய்தான் அதிகம் நினைவில் வைத்துகொள்ளுங்கள் ........................

அடுத்த பதிவில் சிந்திப்போம்............................

2 comments: